சங்கம வம்சத்தைச் சேர்ந்த முதலாம் தேவராயரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தச் செப்புத் தகடுகளின் தொகுப்பு ஆனது இந்தியத் தொல்லியல் துறையினால் வெளியிடப்பட்டுள்ளது.
சமஸ்கிருதம் மற்றும் கன்னடம் மற்றும் நாகரி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ள இவை மன்னர் முதலாம் தேவராயரின் முடிசூட்டு விழாவின் போது வெளியிடப்பட்டதால் ஒரு தனித்துவமானதாகக் கருதப்படுகிறது.
முக்கியமாக, இந்த முத்திரையில் விஜயநகரப் பேரரசின் அரச சின்னமாக விளங்கிய வழக்கமான வராஹருக்குப் பதிலாக வாமனரின் உருவம் இடம்பெற்றுள்ளது.
இந்த செப்புத் தகடுகள் 1406 கி.பி. ஆண்டின் நவம்பர் 05 ஆம் தேதிக்கு இணையான சாகா 1328 (நாக-சக்சு-குண சசி), வியாயா, கார்த்திகா பா. தசமி (10), வெள்ளிக்கிழமை என்று தேதியிடப்பட்டுள்ளன.