ஆர்க்டிக்கின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலை கண்காணிக்க ரஷ்யா தனது முதலாவது செயற்கைக் கோளை வெற்றிகரமாக ஏவியுள்ளது.
கஜகஸ்தானில் உள்ள பைகானூர் காஸ்மோட்ரோமில் இருந்து ஏவுகலனில் உள்ள "ஆர்க்டிகா-எம்" என்ற செயற்கைக் கோளுடன் சோயுஸ் - 2.1 பி என்ற ஒரு சரக்கு ராக்கெட்டானது விண்வெளிக்குப் புறப்பட்டது.
ஆர்க்டிகா-எம் செயற்கைக் கோளானது ரஷ்யாவின் வடக்குப் பிரதேசத்தையும் ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள பகுதிகளையும் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கும்.
இந்தச் செயற்கைக்கோள் ஆனது பூமியின் வட துருவப் பகுதி மற்றும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளின் மேலோட்டப் படங்களை குறைந்தது ஒவ்வொரு 15-30 நிமிடங்களுக்கும் அனுப்பும் திறன் கொண்டது.
இந்தச் செயற்கைக் கோள் ஆனது செயல்பாட்டு வானிலை மற்றும் நீர்நிலைச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டி அது குறித்த தகவல்களை சேகரிக்கவும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் நிலவும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலை கண்காணிக்கவும் உதவ இருக்கின்றது.