TNPSC Thervupettagam

முதலாவது திஷா காவல் நிலையம்

February 12 , 2020 1661 days 704 0
  • இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் திஷா மசோதாவைச் செயல்படுத்த ஆந்திர மாநில அரசு தயாராகி வருகின்றது.
  • முதலாவது திஷா காவல் நிலையத்தை ஆந்திர மாநில முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்தார்.
  • இந்தக் காவல் நிலையங்கள் அம்மாநிலத்தில் அமையவிருக்கும் முதன்மையான காவல் நிலையங்களாகும். இந்தக் காவல் நிலையங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள இருக்கின்றன.
  • ஆந்திர மாநில அரசானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் 18 திஷா காவல் நிலையங்களைத் திறக்க உள்ளது.
  • இந்தக் காவல் நிலையங்கள் திஷா சட்டம், 2019ன் கீழ் நிறுவப் பட்டுள்ளன.
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஆந்திர மாநிலமானது 2019 ஆம் ஆண்டின் திஷா மசோதாவை நிறைவேற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்