இந்த ஆண்டு முதல் புகழ்பெற்ற உத்யோக் ரத்னா விருதை அறிமுகப்படுத்துவதற்கு மகாராஷ்டிர அரசு முடிவு செய்தது.
அம்மாநில அரசானது, டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடாவுக்கு, மதிப்பிற்கு உரிய முதலாவது மகாராஷ்டிரா உத்யோக் ரத்னா விருதை வழங்கி கௌரவித்தது.
இது மதிப்புமிக்க நபர்களுக்கு அரசினால் வழங்கப்படும் மிக உயரிய அரச மரியாதை ஆகும்.
மகாராஷ்டிரா பூஷன் விருதைப் போலவே, இந்த விருதும் பெரு மகத்தான நபர்களுக்கு வழங்கப் படுகிறது.
2008 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் மற்றும் 2000 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் போன்ற இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க குடிமை விருதுகளையும் ரத்தன் டாடா அவர்கள் பெற்றுள்ளார்.