அசாமில் உள்ள போங்காய்கோயான் மாவட்ட நிர்வாகமானது குறிப்பாக முதன்முறை வாக்களிக்கும் வாக்காளர்களைச் சென்றடைவதற்காக ‘சங்கல்ப்’ எனும் அலைபேசி செயலியை உருவாக்கியுள்ளது.
இது முதன்முறை வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் அசாமின் போங்காகோயான் மாவட்ட நிர்வகத்தால் உருவாக்கப்பட்டது.
இந்த செயலியின் உதவியுடன் அவர்கள் வாக்களிக்கும் நாளில் தங்கள் வாக்குகளை அளிப்பதாக உறுதியளித்து டிஜிட்டல் முறையிலான சங்கல்ப் பத்திரத்தில் கையொப்பமிட முடியும்.