2000 ஆம் ஆண்டு பணிக் குழுவினைச் சேர்ந்த இந்தியக் காவல்பணி அதிகாரி லட்சுமி சிங், நியூ நொய்டா பகுதியின் உயர்மட்ட காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் உத்தரப் பிரதேசத்தில் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை இவர் பெற்றார்.
லட்சுமி 2016 ஆம் ஆண்டில் காவலர் பதக்கத்தையும், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் முறையே உத்தரப் பிரதேசத்தின் தலைமை காவல் அதிகாரியின் வெள்ளி மற்றும் தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.