TNPSC Thervupettagam

முதல் யானைகள் வசிப்பிடம் – மத்தியப் பிரதேசம்

January 2 , 2020 1662 days 771 0
  • முதன்முறையாக யானைகளின் வசிப்பிடப் பகுதியானது, மத்தியப் பிரதேசத்தில் உள்ள பந்தவ்கர் காப்புக் காட்டில் அமைந்துள்ளது. அந்த யானைகள் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சத்தீஸ்கரில் இருந்து இங்கு வந்து குடியேறி தங்கியுள்ளன.
  • பந்தவ்கர் காப்புக் காடானது மத்தியப் பிரதேசத்தின் வடகிழக்கு எல்லையிலும் சாத்புரா மலைத்தொடர்களின் வடக்குப் பகுதிகளிலும் பரவியுள்ளது.
  • 1968 ஆம் ஆண்டில், பந்தவ்கர் ஒரு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் அதன் அருகில் அமைந்துள்ள பன்பதா சரணாலயத்தின் கீழ் புலிகள் திட்டப் பணியின் ஆளுகையின் கீழ் பந்தவ்கர் ஒரு புலிகள் காப்பகம் என்று அறிவிக்கப் பட்டது.
  • ‘நாரத பஞ்சரத்ரா’ மற்றும் ‘சிவ புராணம்’ ஆகிய பண்டையப் புத்தகங்களின் குறிப்புகளில் இருந்து இந்த இடமானது ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடையது என்பதனை அறியலாம்.
  • இதுவரை மத்தியப் பிரதேசத்தில் யானைகள் இருந்ததில்லை. இந்தியாவின் மத்தியப் பிராந்தியத்தில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் (சில ஆண்டுகளுக்கு முன்பு வரை) போன்ற மாநிலங்களில் யானைகள் இனம் காணாமல் போனதற்கு எந்த காரணமும் இதுவரையில் அறியப் படவில்லை.
  • மத்தியப் பிரதேசமானது புலிகள் மாநிலம் என்று அழைக்கப்படுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டு நடந்த புலிகளின் எண்ணிக்கைக் கணக்கெடுப்பில், மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் 526 என்ற அளவில் பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்