அசாமின் கவுகாத்தி இரயில் நிலையமானது இந்திய ரயில்வேயில் முதல் ISO தரச் சான்றிதழ் பெற்ற இரயில் நிலையமாக மாறியுள்ளது.
இந்தச் சான்றிதழானது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தினால் சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழலியலில் பயணிகளுக்கு வசதிகளை வழங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு வகையான ISO (தர நிர்ணயத்திற்கான சர்வதேச அமைப்பு) சான்றிதழ்கள் உள்ளன. அவற்றில் கவுகாத்தி இரயில் நிலையம் பெற்றுள்ள சான்றிதழானது ISO-14001 ஆகும்.
ISO 14001:2015 என குறிக்கப்படும் இந்த நிலையத்தின் சான்றிதழானது 2015 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட சர்வதேச விதிமுறைகளின் கீழ் சுற்றுச்சூழல் மேலாண்மை முறைமைக்கானது.