இராஜஸ்தானுக்கு அடுத்தப்படியாக, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்திய 2வது மாநிலமாக சத்தீஸ்கர் மாறியுள்ளது.
இந்தத் திட்டமானது 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கைவிடப்பட்டு, சந்தை சார்ந்த ஓய்வூதியத் திட்டமானது (market-driven pension scheme) அறிமுகப்படுத்தப்பட்டது.