- முரா – திராவா – தனூபே பகுதியானது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் (யுனெஸ்கோ) உலகின் முதலாவது 5 நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய ‘உயிர்க் கோளக் காப்பகம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த உயிர்க்கோளக் காப்பகமானது முரா, திராவா மற்றும் தனூபே ஆறுகளின் 700 கிலோ மீட்டர் பகுதியை உள்ளடக்கியதாகும்.
- இந்தக் காப்பகமானது ஆஸ்திரியா, சுலோவேனியா, குரோசியா, ஹங்கேரி மற்றும் செர்பியா ஆகிய நாடுகள் வரை பரவிக் காணப்படுகிறது.
இந்தியாவிலுள்ள உயிர்க்கோளக் காப்பகங்கள்
- தற்போது இந்தியாவில் 18 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
- இந்தியாவிலுள்ள 12 உயிர்க்கோளக் காப்பகங்கள் யுனெஸ்கோவின் மனிதன் மற்றும் உயிர்க் கோளக் காப்பகத் திட்டத்தின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
- பன்னா உயிர்க்கோளக் காப்பகமானது (மத்தியப் பிரதேசம்) சமீபத்தில் இந்தப் பட்டியலில் சேர்க்கப் பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/25-611.jpg)