மூத்தக் குடிமக்களுக்கு துணைக் கருவிகள் மற்றும் சாதனங்கள்
March 1 , 2020 1885 days 520 0
பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜில் உள்ள ஒரு முகாமில் மூத்தக் குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவும் வகையில் துணைக் கருவிகளையும் சாதனங்களையும் வழங்கினார்.
ராஷ்டிரிய வயோஷ்ரி யோஜனாவின் கீழ் மூத்தக் குடிமக்களுக்கும், துணைக் கருவிகள்/ உபகரணங்கள் வாங்குவது மற்றும் பொருத்துவது என்றதிட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கும் பிரதமர் துணைக் கருவிகளையும் பிற சாதனங்களையும் வழங்கினார்.
திவ்யாங்ஜன் (மாற்றுத் திறனாளிகள்) மற்றும் மூத்தக் குடிமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இந்த துணைக் கருவிகளையும் மற்றும் சாதனங்களையும் கொண்டு உதவுவதே இதன் குறிக்கோளாகும்.