பீகார் அரசின் தற்போதைய ஓய்வூதியத் திட்டமானது வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த சூழ்நிலையில், அனைத்து மூத்த குடிமக்களையும் உள்ளடக்குவதற்காக பின்வரும் புதிய ஓய்வூதியத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முக்கிய மந்திரி விரிதாஜன் ஓய்வூதியத் திட்டம் – MVPY (Mukhyamantri Vridhajan Pension Yojna)
60 வயதைக் கடந்த அனைவருக்குமான முக்கிய மந்திரி விரிதாஜன் ஓய்வூதியத் திட்டம் – MVPY என்ற மாநிலம் தழுவிய புதிய ஓய்வூதியத் திட்டத்தை பீகார் முதல்வர் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம், அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களைத் தவிர சாதி, மதம் மற்றும் சமூகம் என்ற வேறுபாடில்லாமல் அனைவரும் மாத ஓய்வூதியமாக 400 ரூபாயைப் பெறத் தகுதியுடையவர்களாவர்.
பீகார் பட்ராகர் சம்மன் யோஜனா (BPSY - Bihar Patrakar Samman Yojana)
மேலும் பீகார் மாநில முதல்வர் 60 வயதிற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கும் 6000 ரூபாயை மாத ஓய்வூதியமாக அறிவித்துள்ளார்.
ஊடகத் துறையில் தொடர்ந்து பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் எந்தவொரு ஓய்வூதியத்தையும் பெறாத பத்திரிக்கையாளர்கள் அனைவரும் பீகார் பட்ராகர் சம்மன் யோஜனா என்ற திட்டத்திற்குத் தகுதியுடையவர்களாவர்.
இந்த இரு திட்டங்களும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவிருக்கின்றன.