TNPSC Thervupettagam

மூன்றாம் பாலினத்தவர் - பல்நோக்கு மருத்துவமனை

June 4 , 2019 1873 days 824 0
  • சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையானது மூன்றாம் பாலினத்தவருக்கான சுகாதாரப் பாதுகாப்புத் தேவைகளுக்கென இயங்கும் ஒரு முழுநேர சிறப்புப் பிரிவைத் தொடங்கியுள்ளது.
  • நாட்டில் மூன்றாம் பாலினத்தவருக்காக தனிப் பிரிவை ஒரு மருத்துவமனை கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
  • இந்த மருத்துவமனையானது எல்லா நாட்களிலும் திருநங்கைகளுக்கு சுகாதார சேவைகளை வழங்கும்.
  • பத்து வருடங்களுக்கு முன்பு 2009 ஆம் ஆண்டு இதே மருத்துவனையில் முதன் முறையாக திருநங்கைக்குப் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்