TNPSC Thervupettagam

மூன்றாவது செலுத்து தளம் - ககன்யான் திட்டம்

September 23 , 2018 2127 days 1967 0
  • இஸ்ரோவானது (Indian Space Research Organisation) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ ஹரிகோட்டாவில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தை மேற்கொள்ள மூன்றாவது செலுத்து தளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றது.
  • இதுவே இந்தியாவின் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முதலாவது திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் மூன்று விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவானது விண்வெளியில் உள்ள நுண்ணிய புவியீர்ப்பின் மீது பரிசோதனைகளை மேற்கொள்ளும்.
  • இத்திட்டத்தின் கீழ், இந்தியா மூன்று மனிதர்களை (ககன் யாத்ரீகர்கள்) 75வது சுதந்திரத் தினத்தற்குள்ளாக விண்வெளியில் அதன் தாழ் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
  • இந்தக் குழுவானது இந்திய விமானப் படையாலும் இஸ்ரோவாலும் இணைந்து தேர்ந்தெடுக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்