பீகாரின் முசாபர்பூரில் கொடிய மூளைச் செயலிழப்பு நோயின் (AES - Acute Encephalitis Syndrome) காரணமாக 84 குழந்தைகள் இறந்துள்ளனர்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, மிக அதிகப்படியான வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்ட AES நோயினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இறப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உள்ளூரில் இந்த காய்ச்சல் “சம்கி” என்று அழைக்கப்படுகின்றது.
AES
இந்தியாவில் AES நோய் (5% - 35%) ஏற்படுவதற்கு மிக முக்கியக் காரணம் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் வைரஸாகும் (JEV - Japanese Encephalitis Virus).
இந்தியாவில், வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்படுகின்ற AES நோயானது குழந்தைகள் வெறும் வயிற்றில் பழுக்காத லிட்சிப் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படுவதாக தொடர்புபடுத்தப் படுகின்றது.
AES ஏற்படுவதற்கு மிக முக்கியமான வைரஸ்களாக நிபா வைரஸ், ஜிகா வைரஸ் ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளன.
AES நோய் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரைத் தாக்குகின்றது.
இது கணிசமான நோயுறுதல் மற்றும் உயிரிழப்பிற்கு வழி வகுக்கும்.