கர்நாடகா அரசானது நிதி ஆயோக் அமைப்புடன் இணைந்து NIMHANS (National Institute of Mental Health and Neuro Sciences) அமைப்பினால் மேற்கொள்ளப்படும் மூளையின் ஆரோக்கியத்திற்கான ஒரு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
இது நாட்டிலேயே இது போன்ற முதல் வகை முன்னெடுப்பாகும்.
இத்திட்டத்தின் கீழ், மனநல நோயாளிகளைப் பரிசோதித்துச் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த முன்னெடுப்பானது சோதனை அடிப்படையில் பெங்களூரு, கோலார் மற்றும் சிக்கபல்லாப்பூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.