TNPSC Thervupettagam

மெய்நிகர் கற்றல் வகுப்பறை முன்னெடுப்பின் தாக்கம்

December 30 , 2024 61 days 80 0
  • சீர் மிகு நகரங்கள் திட்டத்தின் (SCM) கீழ் மெய்நிகர் கற்றல் வகுப்பறைகள் அறிமுகம் ஆனது 2015-16 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரை சுமார் 19 நகரங்களில் ஒட்டு மொத்த மாணாக்கர் சேர்க்கையில் 22% அதிகரிப்பிற்கு வழிவகுத்தது.
  • 71 நகரங்களில் உள்ள 2,398 அரசுப் பள்ளிகளில் 9,433 மெய்நிகர் கற்றல் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • கர்நாடகாவில் அதிக எண்ணிக்கையிலான மெய்நிகர் கற்றல் வகுப்பறைத் திட்டங்கள் (80) அமல்படுத்தப்பட்டுள்ளன.
  • அதைத் தொடர்ந்து இராஜஸ்தான் (53) உள்ளதோடு தமிழகத்தில் 23 மற்றும் டெல்லி 12 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
  • மேற்கு வங்காளம் ஆனது, இரண்டு அமலாக்கங்களுடன், பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, SCM திட்டத்தின் கீழ் 91% திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
  • SCM திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டில், ‘SAAR’ ​​(நடவடிக்கை மற்றும் ஆராய்ச்சியை நோக்கிய சீர் மிகு நகரங்கள் மற்றும் கல்வித் துறை) என்ற ஒரு தளமானது அறிமுகப் படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்