மேதாரம் ஜத்தாரா என்பது தெலுங்கானாவின் 2வது மிகப்பெரியப் பழங்குடியினச் சமூகமான கோயா பழங்குடியினரால் கொண்டாடப்படும், இந்தியாவின் 2வது மிகப் பெரிய திருவிழா (கும்ப மேளாவிற்கு அடுத்தப்படியாக) ஆகும்.
1996 ஆம் ஆண்டில் ஜத்தாரா மாநிலத் திருவிழாவாக அறிவிக்கப்பட்டது.
இது சம்மக்கா சரளம்மா ஜத்தாரா எனவும் அழைக்கப்படுகிறது.
ஒரு அநியாயச் சட்டத்தை எதிர்த்து அரசர்களுக்கு எதிராக சண்டையிட்ட சம்மக்கா மற்றும் சரளம்மா ஆகிய தாய் மற்றும் மகள் ஆகியோரைக் கௌரவிக்கும் ஒரு பழங்குடியினப் பண்டிகை ஆகும்.
மேதாரம் என்பது எட்டூர்நகரம் (Eturnagaram) என்ற வனவிலங்குச் சரணாலயத்தில் அமைந்த ஒரு தொலைதூரப் பகுதியாகும்.