TNPSC Thervupettagam

மேதினி புரஷ்கர் யோஜனா திட்டம்

July 23 , 2018 2188 days 738 0
  • இந்தி மொழியில் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வானிலை மாற்றங்கள் ஆகிய தலைப்புகளில் இந்திய ஆசிரியர்களின் சுயமான பங்களிப்பிற்கு விருதளிக்கும் திட்டமான ‘மேதினி புரஷ்கர் யோஜனா’ திட்டத்தினை சுற்றுச்சூழல் அமைச்சகம் திரும்ப அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இத்திட்டம் சுற்றுச் சூழல் தலைப்புகளில் எழுதுவதற்கு இந்தி நூலாசிரியர்களை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த விருது சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் நிர்வகிக்கப்படும். ஏப்ரல் 1-லிருந்து ஒவ்வொரு நிதி வருடத்திலும் இவ்விருது வழங்கப்படும்.
  • அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தலைமையின் கீழ், மதிப்பிடுதலுக்காக சமர்ப்பிக்கப்படும் புத்தகங்களை ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் குழு ஒன்று அமைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்