இளையோர் மேம்பாட்டிற்காக புதிய அரசாங்கத் தளத்தினை அமைக்க உள்ளதாக மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது.
இதற்கு ‘மேரா யுவ பாரத்’ அல்லது எனது பாரதம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தளமானது இளையோர்களைச் சமூகத்தில் ஒரு முதன்மைச் சமூக கண்டு பிடிப்பாளர்களாகவும், தலைவர்களாகவும் உருவாக்குவதற்கு இளையோர்களிடையே தலைமைத்துவத் திறன்களை வளர்ப்பதை ஒரு இலக்காகக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளையோர்கள் இத்தளத்தின் மூலம் பயனடைய முடியும்.