"மேரா யுவ பாரத் (எனது பாரதம்)" என்ற தன்னாட்சி அமைப்பை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது இளையோர் மேம்பாடு மற்றும் இளையோர் வழியிலான முன்னேற்றத்திற்கான ஒரு முக்கியத் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பாகக் கருதப்படுகிறது.
இளையோர்கள் தாங்கள் ஆர்வம் செலுத்தும் துறை பற்றி அறியவும், அரசாங்க முன்னெடுப்புகளின் பல்வேறு அம்சங்களில் "விக்சித் பாரத்" என்பதை (வளர்ச்சி அடைந்த இந்தியா) உருவாக்கப் பங்காற்றவும் சமமான வாய்ப்புகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.