TNPSC Thervupettagam

மேல் மட்ட சியாங் நதி நீர்மின் ஆற்றல் உற்பத்தி நிலையம்

July 16 , 2024 4 days 125 0
  • மேல் மட்ட சியாங் நதி நீர்மின் ஆற்றல் உற்பத்தி நிலையமானது, அருணாச்சலப் பிரதேசத்தின் மேல் மட்ட சியாங் மாவட்டத்தில் சியாங் நதியின் மீது அமைக்கப்பட உள்ள 11,000 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் ஆற்றல் உற்பத்தி நிலையமாகும்.
  • திபெத்தில் உள்ள கைலாஷ் மலைக்கு அருகில் சியாங் நதி உருவாகிறது என்ற நிலையில் அங்கு இது சாங்போ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
  • சியாங் நதிப் படுகையில் மொத்தம் 29 நீர்மின் ஆற்றல் உற்பத்தி நிலையங்கள் (25 மெகா வாட்டிற்கும் மேலான நிறுவப்பட்ட திறன் கொண்டவை) உள்ள நிலையில் இவற்றின் ஒருங்கிணைந்த நிறுவல் திறன் 18,326 மெகாவாட் ஆகும்.
  • தற்போது முன்மொழியப்பட்ட மேல் மட்ட சியாங் நதி நீர்மின் ஆற்றல் உற்பத்தி நிலையத்தின் நிறுவப்பட்ட திறனானது இந்த மதிப்பில் தோராயமாக 60% பங்கினைக் கொண்டிருக்கும்.
  • இது அதி பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமங்களை மூழ்கடிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்