முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் மைதாவோளு நரசிம்மன் அவர்கள் தனது 94 வயதில் இயற்கை எய்தினார்.
இவர் 1977 ஆம் ஆண்டின் மே முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றினார்.
மேலும் இவர் 1991 ஆம் ஆண்டில் நிதி அமைப்பின் மீதான குழுவிற்கும், 1998 ஆம் அண்டில் வங்கித் துறை சீர்திருத்தங்கள் குறித்த குழுவிற்கும் தலைவராக பணியாற்றினார்.
இவர் இந்திய வங்கிச் சீர்திருத்தங்களின் தந்தை என்றறியப் படுகிறார்.