TNPSC Thervupettagam

மோதல் காலங்களில் நிகழும் பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - ஜூன் 19

June 21 , 2023 429 days 161 0
  • இந்தத் தினமானது, மோதல் காலங்களில் நிகழும் பாலியல் வன்முறை என்ற முக்கியப் பிரச்சினையை முன்னிலைப்படுத்துவதையும், அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "மோதல் காலங்களில் நிகழும் பாலியல் வன்முறைகளைத் தடுத்தல், அது குறித்து உரையாற்றுதல் மற்றும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியவற்றிற்காக பாலினம் சார்ந்த எண்ணிம பிளவைக் குறைத்தல்" என்பதாகும்.
  • இந்த நாள் 2015 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் நிறுவப் பட்டதாகும்.
  • இது மோதல் காலங்களில் நிகழும் பாலியல் வன்முறையை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உலகெங்கிலும் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களுக்கு மரியாதை கிடைக்கச் செய்வதையும் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்