சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பானது (IUCN) “உலகமயமாக்கப் பட்ட உலகின் இயற்கை, மோதல் மற்றும் பாதுகாப்பு” (Nature in Globalised World : Conflict and Conservation) என அழைக்கப்படும் ஒரு அறிக்கையினைச் சமீபத்தில் வெளியிட்டது.
இயற்கைக்கும் ஆயுதமேந்திய மோதலுக்கும் இடையேயான ஒரு சிக்கலான தொடர்பினைப் பற்றி இந்த அறிக்கை விவரிக்கிறது.
உலகில் மோதல்களால் விளைவிக்கப்படும் முக்கிய அபாயங்களாவன பாதுகாப்பு முயற்சிகளின் சீர்குலைவு, வனவிலங்குகளைக் கொல்லுதல், சுற்றுச்சூழலின் சீரழிவு போன்றவையாகும்.
ஆயுதமேந்திய மோதல்கள் பெரும்பாலும் உலகிலுள்ள முக்கிய பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகளில் நிலவுகின்றன.
எடுத்துக்காட்டாக இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-சீனா ஆகிய எல்லை சார்ந்த மோதல்கள் இமாலயப் பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
இராணுவப் பயிற்சிகள் மற்றும் ஒழுங்கற்ற ஆட்சிமுறை போன்றவை, அச்சுறுத்தல் நிலையிலுள்ள 200 இனங்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன.
இதில் மிகவும் அருகி வரும் ஒரு இனமான கிழக்கத்திய கொரில்லா போன்ற ஒரு தனித்தன்மை வாய்ந்த இனங்களும் அடங்கும்.
ஒரு நாட்டில் விவசாயத்திற்குக் குறைவான நிலப்பரப்பே உள்ளது என்றாலோ (அ) நிலத்தினுடைய வேளாண் உற்பத்தித் திறன் குறைவாக இருந்தாலோ அந்த வகையிலான நாடுகளில் போர்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
எப்பொழுதெல்லாம் அதிகளவில் வறட்சி ஏற்பட்டனவோ அப்போதெல்லாம் அடிக்கடி போர்கள் நடைபெற்றன.