TNPSC Thervupettagam

மோ சர்க்கார் - ஒடிசா அரசு

October 4 , 2019 1754 days 630 0
  • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒடிசா மாநில முதலமைச்சரான நவீன் பட்நாயக், தனது அரசாங்கத்தின் புதிய நிர்வாக முயற்சியாக ‘மோ சர்க்கார்’ என்றத் திட்டத்தைத் தொடங்கினார்.
  • பல்வேறு நோக்கங்களுக்காக அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களுக்கு கண்ணியத்துடன் சேவைகளை வழங்குவதே ‘மோ சர்க்கார்’ என்ற திட்டத்தின் நோக்கமாகும்.
  • சேவைகளைப் பெறுவதற்கு அரசு அலுவலகங்களுக்கு வரும் நபர்களின் தொலைபேசி எண்கள் தோராயமாக சேகரிக்கப்படும்.
  • அரசாங்க அதிகாரிகளின் நடத்தை மற்றும் தொழில்முறை குறித்த கருத்துக்களைச் சேகரிக்க அவர்கள் மீண்டும் தொலைபேசியின் மூலம் அழைக்கப்படுவார்கள்.
  • பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் ஊழியர்களின் நடத்தை நல்ல முறையில் உள்ளதா மோசமான நிலையில் உள்ளதா என்பது குறித்து அறிந்து, அதற்கேற்றாற் போல  ஊழியர்கள் தரவரிசைப் படுத்தப்படுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்