TNPSC Thervupettagam

யஸ்வந்த் ராவ் சவான் தேசிய விருது 2018

March 11 , 2019 1968 days 547 0
  • முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் 2018 ஆம் ஆண்டிற்கான யஸ்வந்த் ராவ் சவான் தேசிய விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இது பொருளாதார வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்பிற்காக வழங்கப்படுகின்றது. இந்த விருது மும்பையில் மார்ச் 12-ம் தேதி அன்று நடைபெறும் மறைந்த யஸ்வந்த்ராவ் சவானின் 106-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
  • சவான் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலாவது முதலமைச்சர் ஆவார்.
  • இந்த விருது ஒவ்வொரு வருடமும் யஸ்வந்த் ராவ் சவான் பிரதிஸ்தான் எனும் அமைப்பால் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்த தனிநபர்கள்/நிறுவனங்கள் ஆகியோரின் அங்கீகாரத்திற்காக வழங்கப்படுகின்றது.
  • இவ்விருது தேசிய ஒருமைப்பாடு, ஜனநாயக விழுமியங்கள், சமூக பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்காக சிறந்த பங்களிப்புகளை அளித்தமையை அங்கீகரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்