ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிறுவனமான ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமானது தற்பொழுது மெய்நிகர் நாணயத்தில் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட முதலாவது ஐ.நா. அமைப்பாக உருவெடுத்துள்ளது.
அமெரிக்க செஞ்சிலுவை சங்கம் போன்ற மெய்நிகர் நாணயத்தில் நன்கொடைகளை ஏற்றுக் கொள்ளும் பல உதவி செய்யும் நிறுவனங்களுடன் யுனிசெப் இப்போது இணைகின்றது.
இது யுனிசெப் மெய்நிகர் நாணய நிதியை நிறுவியுள்ளது. இது பிட்காயின் மற்றும் ஈதர் போன்ற மெய்நிகர் நாணயங்களின் வடிவத்தில் நன்கொடைகளை ஏற்றுக் கொள்கின்றது.
மெய்நிகர் நாணயங்கள் மூலம் யுனிசெப்பிற்குப் பங்களிக்கும் முதல் நிறுவனமாக எத்தேரியம் அறக்கட்டளை இருக்கும்.