அக்டோபர் 2018லிருந்து மாநில இளைஞர்களுக்கு ‘வேலையில்லாதோர்க்கான உதவித் தொகை’ வழங்குவதற்காக ‘யுவ நெஸ்டம்’ என்ற திட்டத்தை ஆந்திர மாநில அரசு தொடங்கவுள்ளது.
இந்த நோக்கத்திற்காக மாநில முதலமைச்சர் ‘’ap.gov.in‘’ என்ற இணையதளத்தை தொடக்கி வைத்துள்ளார். இதன் மூலம் மனுதாரர்கள் பதிவு செய்யவேண்டும்.
இத்திட்டமானது 25 வயது முதல் 35 வயது வரையிலான வேலையற்ற இளைஞர்களுக்கு ரூ.1000 உதவித்தொகையாக வழங்குகிறது.