இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தினைச் சேர்ந்த நான்கு அறிவியலாளர்கள் குழு ஒன்று, பார்வையற்ற நன்னீர் வாழ் (ஈல்) விலாங்கு மீன் இனத்தினைக் கண்டறிந்து உள்ளது.
இந்தப் புதிய விலாங்கு மீன் வகையானது மகாராஷ்டிராவின் மும்பை பகுதியில் கண்டறியப் பட்டுள்ளது.
இந்த விலாங்கு மீன் இனமானது மண்ணிற்கு அடியில் புதைந்து வாழும் பார்வையற்ற நன்னீர் வாழ் மீன் இனம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
மகாராஷ்டிரா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதிகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட முதல் இனம் இதுவாகும்.
இந்த இனம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் நினைவாக ரக்தமிச்சைஸ் மும்பா எனப் பெயரிடப் பட்டுள்ளது.
இது இந்திய நாட்டினைப் பிறப்பிடமாகக் கொண்ட ரக்தமிச்சின் இனத்தைச் சேர்ந்த 5வது இனமாகும்.