TNPSC Thervupettagam

ரயில்வே பாதுகாப்புப் படை நிறுவன தினம் - செப்டம்பர் 20

September 22 , 2019 1834 days 563 0
  • ரயில்வே பாதுகாப்புப் படை தனது 35வது நிறுவன நாளை செப்டம்பர் 20 அன்று கொண்டாடியது.
  • 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று இந்திய ஒன்றியத்தின் மற்ற துணை ராணுவப் படைகளுக்கு இணையாக ரயில்வே பாதுகாப்புப் படைக்கு ஆயுதப் படை தகுதியை  வழங்கியதை நினைவு கூரும் வகையில் இது கொண்டாடப்பட்டது.
  • இந்தப்  படை மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது.
  • ரயில்வே பாதுகாப்புப் படையானது  தேடுதல், கைது செய்தல், விசாரணை நடத்துதல் மற்றும் வழக்குத் தொடருதல் போன்ற அதிகாரங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும் இறுதி அதிகாரம் மத்திய அரசின்  ரயில்வே காவல்துறையின் கைகளில் உள்ளது.
  • தற்போதைய ரயில்வே பாதுகாப்புப் படையின் பொது இயக்குநர் அருண் குமார் ஐ.பி.எஸ் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்