TNPSC Thervupettagam

ரவிந்த்ரா தோலக்யா குழு

July 5 , 2018 2195 days 661 0
  • மாநில மற்றும் மாவட்ட அளவில் பொருளாதார தகவல்கள் கணக்கீடுகளுக்கான விதிகளை மேம்படுத்துவதற்காக துணை - தேசிய கணக்குகளுக்கான 13 உறுப்பினர்களைக் கொண்டக் குழுவை மத்திய அரசு அமைந்துள்ளது.
  • இது தேசியக் கணக்குகள் (அ) மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீடுகளுக்கான அடித்தள ஆண்டை மாற்றியமைப்பதற்கான திட்டமிடுதலின் பின்னணியில் உருவாக்கப்பட்டது.
  • இந்த குழு அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியரான ரவிந்த்ரா H தோலக்யா என்பவரால் தலைமை தாங்கப்படும்.
  • மத்திய புள்ளியியல் அமைப்பானது கடைசியாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான அடித்தள வருடத்தினை ஜனவரி 2015-லிருந்து பழைய அடித்தள வருடமான 2004-2005 -ஐ 2011-2012 ஆக மாற்றியது.
  • பொருளாதரத்தில் மாற்றங்களை எற்படுத்துவதற்காக புள்ளியியல் மற்றும் திட்டம் செயல்படுத்துதல் அமைச்சகம் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தி எண்ணிக்கைகள் ஆகியவற்றின் கணக்கீடுகளுக்கான அடித்தள வருடத்தை 2011-2012 லிருந்து 2017-2018 மாற்றுவதற்காக திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்