என்டிடிவியைச் (NDTV) சேர்ந்த பத்திரிக்கையாளரான ரவீஷ் குமார் 2019 ஆம் ஆண்டின் ரமோன் மகசேசே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
“குரலற்றவர்களுக்காக குரலைக் கொடுப்பதற்குப் பத்திரிக்கையைப் பயன்படுத்தியதற்காகவும்” மிக உயரிய தரமுள்ள அறம் சார்ந்த பத்திரிக்கைத் துறைக்கு அயராது பாடுபட்டதற்காகவும் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
மகசேசே விருது என்பது ஆசியாவைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் வழங்கப்படும் மிக உயரிய கௌரவ விருதாகும். இது பெரும்பாலும் நோபல் பரிசின் ஆசியப் பதிப்பு என்று அழைக்கப்படுகின்றது.