ராஜஸ்தான் மாநில வனத்துறையானது, ராஜஸ்தானின் அரிய மற்றும் அருகி வரும் நிலையிலுள்ள வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக வேண்டி மூன்று புதிய வளங் காப்பகங்களை அறிவித்துள்ளது.
பாரனில் உள்ள சோர்சன், ஜோத்பூரில் உள்ள கிச்சான் மற்றும் பில்வாராவில் உள்ள ஹமிர்கர் ஆகியவை இந்தப் புதிதாக அறிவிக்கப்பட்ட மூன்று புதிய வனவிலங்கு வளங் காப்பகங்கள் ஆகும்.
பாரனில் உள்ள சோர்சன் பகுதியின் புல்வெளிகள் கான மயில்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருக்கும்.
ஜோத்பூரில் உள்ள கிச்சான் என்பது, ஆயிரக்கணக்கான வலசை செல்லும் நெட்டை கொக்குகளுக்குப் புகலிடம் வழங்குகிறது.
கிச்சான் நெட்டை கொக்குகளுக்கான இந்தியாவின் முதல் வளங்காப்பகமாகும்.
புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த மூன்று வனவிலங்கு வளங்காப்பகங்களுடன், தற்போது 26 வனவிலங்கு வளங்காப்பகங்கள் உள்ளன.