TNPSC Thervupettagam

ராஜா பாலிந்திரா கோப்பை

November 13 , 2023 248 days 230 0
  • சமீபத்தில் முடிவடைந்த 2023 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 11,000 விளையாட்டு வீரர்கள் 45 வெவ்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.
  • மகாராஷ்டிரா அணி 80 தங்கம், 69 வெள்ளி, 79 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 228 பதக்கங்களை வென்றது.
  • இந்திய ஆயதப் படைகளால் நிர்வகிக்கப் படும் SSCB அணி (Services Sports Control Board – விளையாட்டுச் சேவை கட்டுப்பாட்டு மன்றம்) 66 தங்கம், 27 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • ஹரியானா அணி 62 தங்கம், 54 வெள்ளி மற்றும் 73 வெண்கலப் பதக்கத்துடன் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • மகாராஷ்டிரா அணியானது, ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்று 1994 ஆம் ஆண்டிலிருந்து முதன்முறையாக மதிப்புமிக்க ராஜா பாலிந்திர சிங் ரோலிங் கோப்பையினை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்