கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கிட்டூரில் நடைபெறும் கிட்டூர் உத்சவத்தைத் துவக்கி வைத்தார்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாக்களில் விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் ராணி சென்னம்மாவின் இராஜ்ஜியம் பற்றிய சொற்பொழிவுகள் இடம் பெற்றன.
அவர் (1778 - 1829) ஒரு இந்திய சுதந்திரப் போராளி மற்றும் பெண் சுதந்திரப் போராட்ட வீரர்களில் முதலாவது நபர்களில் ஒருவராக இருந்தவர் ஆவார். மேலும் அவர் கர்நாடகாவின் முன்னாள் சுதேச அரசான கிட்டூரின் ராணியாகவும் இருந்தார்.
1824 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக அவர்களின் வாரிசு இழப்புக் கொள்கையைப் புறக்கணித்து ஒரு ஆயுதப் படையை அவர் வழி நடத்தினார்.