கட்டிடக் கலைக்கான உலகின் உயரிய விருதினை ராயல் (அரசு) தங்கப் பதக்கமானது (2022) கட்டிடக்கலை நிபுணர் பாலகிருஷ்ண தோஷி என்பவருக்கு வழங்கப்பட உள்ளது.
94 வயதான தோஷி தனது கற்பித்தல் மற்றும் பயிற்சி மூலமாக இந்தியாவிலும் அதன் அருகமைந்த பகுதிகளிலும் கட்டிடக்கலையின் போக்கில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ராயல் தங்கப் பதக்கமானது அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களால் தனிப்பட்ட முறையில் அங்கீகரிக்கப்பட்டதாகும்.
கட்டிடக் கலையின் மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய ஒருவர் அல்லது குழுமத்திற்கு இந்தப் பதக்கமானது வழங்கப்படுகிறது.