தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரான ரேகா சர்மா அவர்களின் பதவிக் காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக் காலங்களில் வீடுகளில் தனியாக சிக்கித் தவிக்கும் முதியவர்களுக்கு உதவுவதற்காக வேண்டி “Happy to Help” எனும் சிறப்புப் படைப் பிரிவை உருவாக்கியதில் ரேகா சர்மா முன்னோடியாக திகழ்ந்தார்.
மேலும் பெருந்தொற்றுக் காலங்களில் மகளிர் தங்களது வழக்குகளைப் பதிவு செய்வதற்காக வேண்டி ஒரு வாட்ஸ்அப் எண்ணினைத் தொடங்கியதற்காகவும் சேர்த்து அவருக்குப் பாராட்டுகள் வழங்கப் பட்டன.