TNPSC Thervupettagam

ரையத்து பந்து திட்டம்

May 18 , 2018 2255 days 719 0
  • விவசாயிகளினுடைய வாழ்வாதாரத்திற்கு (livelihood of farmers) ஆதரவளிப்பதற்காக, உழவர்களின் நண்பன் (friend of farmers) எனப் பொருள்படும் ரையத்து பந்து (Rythu Bandhu) எனும் முதலீட்டு ஆதரவுத் திட்டத்தினை (Investment support scheme) தெலுங்கானா அரசு தொடங்கியுள்ளது.
  • விவசாய விளைபொருட்கள் உற்பத்தியினையும் (agricultural production), உற்பத்தித் திறனையும் (productivity) அதிகரிக்க இத்திட்டத்தின் கீழ் ஓர் ஆண்டிற்கு இருமுறை விவசாயிகளுக்கு நேரடி நிதியியல் உதவி வழங்கப் பெறும்.
  • இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்தினாலும் தொடங்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலீட்டு ஆதரவுகளை வழங்குகின்ற முதல் வகையானத் திட்டம் இதுவேயாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு ஏக்கருக்கு ரூ 8000 ரூபாய் அளவு விவசாயிகள் முதலீட்டு ஆதரவினை பெறுவர். பருவகால பயிருக்கென (monsoon) ரூ.4000 ரூபாயும், குளிர்காலப் பயிருக்கென (Rabi season) ரூ.4000 ரூபாயும் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்