லச்சித் போர்புகனுடைய 400வது பிறந்தநாளையொட்டி அசாம் முதல்வர் பல நலத் திட்டங்களை அறிவித்திருந்தார்.
லச்சித் போர்புகன் என்பவர் அஹோம் (Ahom) படையின் தளபதியாகவும் அசாமிய தேசிய வாதத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தவர் ஆவார்.
முந்தையப் போர்களில் அஹோம்களால் கைப்பற்றப்பட்டப் பிரதேசங்களை 1669 ஆம் ஆண்டில், மீண்டும் கைப்பற்றுவதற்காக வேண்டி ராஜ்புத் மன்னர் முதலாம் ராஜாராம் சிங்கினை அவுரங்கசீப் அனுப்பினார்.
எனவே, அஹோம் மற்றும் முகலாயர்களுக்கு இடையில், வடக்கு கவுகாத்தியிலுள்ள அலபோய் மலையில் அலபோய் போரானது நடைபெற்றது.
அலபோய் போரில் பெரும் தோல்வியைச் சந்தித்த பிறகு, லச்சித் போர்புகன் 1671 ஆம் ஆண்டில், (வெறும் 2 ஆண்டுகளுக்குள்) முகலாயர்களை அழித்தார் (சராய்காட் போரில்).
பிரம்மபுத்திரா நதியில் நடந்த சராய்காட் போரில் (கடற்படை போர்) லச்சித் வெற்றி பெற்றார்.
அஹோம் இராஜ்ஜியமானது 13 ஆம் நூற்றாண்டின் அரசரான சாவ்லங் சுகாபாவினால் நிறுவப் பட்டதாகும்.