TNPSC Thervupettagam
May 21 , 2018 2282 days 710 0
  • குடியரசுத் தலைவர் திரு.இராம்நாத் கோவிந்த், உத்தம் பச்சர்னே என்பவரை லலித்கலா அகாடமியின் முழுநேர தலைவராக நியமித்துள்ளார்.

 

  • இவர் பதவியேற்ற தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு தலைவர் பதவியில் நீடிப்பார்.
  • இதற்கு முன்னர், மத்திய கலாச்சாரத் துறையில் இணைச் செயலாளராக (கல்வி) பணியாற்றி வரும் திரு.ML ஸ்ரீவஸ்தவா அவர்கள் மார்ச் 2018ல் லலித்கலா அகாடமியின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • உத்தம் பச்சர்னே தேசிய லலித்கலா விருது (1985) மஹாராஷ்டிரா கவுரவ் புரஸ்கார் விருது (1985), இளையோர் தேசிய விருது (1986) மற்றும் ஜீவன் கவுரவ் புரஸ்கார் விருது (2017) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • நடப்பில் இவர்,
    • கோவாவிலுள்ள லலித்கலா அகாடமியின் ஆலோசனைக் குழு உறுப்பினர்.
    • PL தேஷ் பாண்டே மாநில லலித்கலா அகாடமியில் ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் ஜன்சேவா சஹாகரி வங்கியின் போரிவாலி கிளையின் இயக்குநர்.
  • இந்தியாவின் கலைகளைப் பற்றிய புரிதலை நாட்டிற்குள்ளேயும், நாட்டிற்கு வெளியேயும் ஊக்குவித்தல் மற்றும் பரப்புதல் ஆகிய பணியை மேற்கொள்ளும் தேசிய நிறுவனமே லலித்கலா அகாடமி ஆகும்.
  • கலைகளுக்கான தேசிய அகாடமி எனவும் அழைக்கப்படும் இந்த நிறுவனம், மத்திய கலாச்சாரத் துறையால் நிதியளிக்கப்படும் தன்னாட்சி அதிகாரமுடைய நிறுவனமாகும். இது 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

       

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்