TNPSC Thervupettagam
April 2 , 2018 2331 days 1840 0
  • அண்மையில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரான L ஸ்ரீவத்ஸவாவை லலித் கலா அகாடமியின் இடைக்காலத் தலைவராக (Protem Chairman) இந்தியக் குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
  • லலித் கலா மேளா அகாடமி (அல்லது) கலைகளுக்கான தேசிய அகாடமியானது (National Academy of Art) இந்தியாவின் கவின்கலைகளுக்கான (Fine Arts) தேசிய அகாடமியாகும்.
  • உள்நாட்டு அளவிலும் வெளிநாட்டளவிலும் இந்தியாவின் கலைகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்காகவும், அவற்றைப் பரப்புவதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் 1954 ஆம் ஆண்டு புதுதில்லியில் ஓர் தன்னாட்சியுடைய நிறுவனமாக லலித் கலா அகாடமி அமைக்கப்பட்டது.
  • லலித் கலா அகாடமியானது இந்தியாவில் காட்சிக் கலைத் துறையில் (visual arts) அரசினுடைய உச்ச கலாச்சார அமைப்பாகும்.
  • இந்தியாவின் முதல்  கல்வி  அமைச்சரான மவுலானா அபுல் கலாம் ஆசாத்  (Maulana Abul Kalam)  அவர்களினால் லலித் கலா அகாடமி  தோற்றுவிக்கப்பட்டது.
  • உதவித் தொகைகள் மற்றும் மானியங்கள் மூலம் கலை நிறுவனங்கள் மற்றும் கலைஞர்களுக்கு நிதியியல் உதவி வழங்குவதிலும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளை நடத்திவதில்  முடிவுகளை எடுப்பதிலும் இந்த அமைப்பு கணிசமான அளவு சுதந்திரச் செயல்பாட்டை கொண்டுள்ளது.
  • தன்னாட்சியுடைய அமைப்பான லலித் கலா அமைப்பிற்கு மத்திய கலாச்சார அமைச்சகத்தினால் முழுவதுமாக நிதியளிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்