மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர், டாக்டர். ஜிதேந்திரா சிங், ஜம்மு & காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களின் மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் அமர்விற்குத் தலைமை தாங்கினார்.
லாவென்டரை ஒரு டோடா தயாரிப்புப் பொருளாக அறிவிப்பதற்கான முடிவானது இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்டது.
‘ஒரே மாவட்டம், ஒரே தயாரிப்புப் பொருள்’ என்ற முன்னெடுப்பின் கீழ், லாவென்டர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டது.
ஜம்மு & காஷ்மீரிலுள்ள டோடா மாவட்டமானது இந்தியாவின் ஊதாப் புரட்சி அல்லது லாவென்டர் சாகுபடியின் பிறப்பிடமாகும்.
ஊதாப் புரட்சியானது (லாவென்டர் சாகுபடி) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நறுமணத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
நறுமணத் திட்டமானது, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிச் சபையினால், ஜம்முவிலுள்ள தனது ஆய்வகமான இந்திய ஒருங்கிணைந்த மருத்துவக் கல்வி நிறுவனத்தின் மூலம் அமல்படுத்தப்படுகிறது.