இந்தியப் பிரதமர் அவர்களுக்கு லோகமான்ய திலகர் தேசிய விருது வழங்கப் பட்டு உள்ளது.
இந்த விருதினைப் பெறும் 41வது நபர் இவர் ஆவார்.
இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் வாழ்வியல் மரபினைப் போற்றும் வகையில் இந்த விருதானது வழங்கப்படுகிறது.
இந்த விருதானது திலக் ஸ்மாரக் மந்திர் அறக்கட்டளையால் 1983 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.
இது தேசத்தின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக நன்கு உழைத்தவர்களுக்கும், குறிப்பிடத் தக்க மற்றும் மகத்தானப் பங்களிப்பினை ஆற்றிய நபர்களுக்கும் வழங்கப் படுகிறது.
இந்த விருதானது ஒவ்வோர் ஆண்டும் பாலகங்காதர திலகர் அவர்களின் நினைவு நாளான ஆகஸ்ட் 01 ஆம் தேதியன்று வழங்கப் படுகிறது.
கடந்த ஆண்டில், இந்தியாவின் “ஏவுகணைப் பெண்” என்று அழைக்கப்படும் மூத்த அறிவியலாளர் டெஸ்ஸி தாமஸுக்கு லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கப் பட்டது.