மேகாலயாவில் முதல் லோக் ஆயுக்தாவின் தலைவராக கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரணாய் குமார் முசரி என்பவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
லோக் ஆயுக்தா என்பது அரசு அதிகாரிகளையும் சேர்த்ததோடு மட்டுமல்லாமல் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்றத்தின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகிய பொது அலுவலர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான வகையில் அதிகாரமளிக்கப்பட்டிருக்கும் அமைப்பாகும்.