வங்க தேசத்தில் ‘தி ஆர்கேடியா கல்வித் திட்டம்’ என்ற பெயரைக் கொண்ட மிதக்கும் பள்ளித் திட்டமானது ஆகா கான் கட்டிடக்கலை விருதினை வென்றுள்ளது.
மழைக் காலத்தில் மூழ்காத பள்ளிகளுக்கு நிதியளிப்பதற்கும் கிராமப்புற மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வங்க தேச அகதியான ரசியா ஆலம் ஒரு முடிவு செய்தார்.
சர்வதேசப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான சைஃப் உல் ஹக் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தி இந்த திட்டத்தை உருவாக்கினார்
இப்பள்ளியானது வறண்ட காலங்களில் நிலத்தில் இருக்கும். மழைக்காலத்தின் போது இப்பகுதி நீரில் மூழ்கி இருந்தால் இந்தப் பள்ளி தண்ணீரில் மிதக்கும்.