பாகிஸ்தான் அரசானது, இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் 2027 ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டில் வட்டியில்லா வங்கி முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இது நெறிமுறை சார்ந்த தரநிலைகளின் அடிப்படையில் செயல்படுவதோடு அது முஸ்லிம்கள் எந்தவிதமான வட்டியையும் செலுத்துவதையோ அல்லது பெறுவதையோ தடுக்கிறது.
இஸ்லாமியத்தின் பொருளாதார நோக்கங்களை அடைவதற்கான பயனுள்ளச் செயற் கருவியாக இது கருதப்படுகிறது.
இருப்பினும், இவை ஷரியா சட்டங்களுக்கு இணங்கவில்லை என்றாலும், தற்போதுள்ள சர்வதேச நிதிசார் உறுதிப்பாடுகளை நிறைவேற்றச் செய்வதற்கு பாகிஸ்தான் கடமைப் பட்டுள்ளது.