PFM-1 ரக ‘வண்ணத்துப்பூச்சி வடிவிலான கண்ணிவெடியினை' ரஷ்ய நாட்டு ராணுவம் பயன்படுத்துவது குறித்த சாத்தியக் கூறுகள் பற்றி ஐக்கிய இராஜ்ஜியம் எச்சரித்தது.
வண்ணத்துப்பூச்சி வடிவிலான கண்ணிவெடிகள் இராணுவம் மற்றும் உள்ளூர்ப் பொது மக்களிடையே பெருமளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் திறன் கொண்டவை ஆகும்.
முன்னதாக, சோவியத்-ஆப்கான் இடையிலான போரில் PFM-1 ரக கண்ணிவெடிகள் பயன்படுத்தப்பட்டன.
PFM-1 மற்றும் PFM-1S மனிதர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் கண்ணிவெடிகள் பொதுவாக 'வண்ணத்துப்பூச்சி வடிவிலான கண்ணிவெடிகள் அல்லது 'கிரீன் பாராட்ஸ்' என்று அழைக்கப் படுகின்றன.
அவற்றின் வடிவம் மற்றும் நிறத்தின் காரணமாக இது இப்பெயர் பெற்றது.
வண்ணத்துப்பூச்சி வடிவிலான வெடிகுண்டுகள் வண்ணமயமான பொம்மையைப் போன்று இருப்பதால் இது குழந்தைகளைக் கவர்கிறது.
இவற்றைத் தொடுவதன் மூலம் அவை வெடிக்கும் அளவிற்கு அது மிகவும் உணர்திறன் கொண்டவையாக இருப்பதோடு அவற்றை எடுப்பதன் மூலமும் இவற்றை வெடிக்கச் செய்யலாம்.
இவை நெகிழிப் பொருளால் ஆனவை என்பதால் அதனைக் கண்டறிவது மிகக் கடினம் ஆகும்.
மேலும், இது உலோகக் கண்டறிவு கருவிகளுக்குப் புலப்படாத திறன் கொண்டதாகும்.