உலகளவில் காடழிப்பு விகிதமானது 2018-20 ஆம் ஆண்டு அடிப்படை அளவுடன் ஒப்பிடும் போது 2021 ஆம் ஆண்டில் 6.3% மட்டுமே குறைந்துள்ளது.
COP 26 மாநாட்டில் சுமார் 145 நாடுகள் 2030 ஆம் ஆண்டிற்குள் காடுகளின் இழப்பு மற்றும் நிலச் சீரழிவை நிறுத்துவதற்கும் அவற்றை மாற்றுவதற்குமான தங்கள் உறுதிப் பாட்டை உறுதிப்படுத்தியுள்ளன.
ஆனால், 2030 ஆம் ஆண்டில் காடழிப்பை நிறுத்துவதற்கான ஒரு உலகளாவியக் குறிகாட்டியும் இதுவரை தேவையான போக்கில் செயல்படவில்லை.
2030 ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை முற்றிலுமாக நிறுத்துவதற்கு, 10% வருடாந்திரக் குறைப்பு தேவையாகும்.
காடு வளர்ப்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், வனங்கள் உருவாக்கப் படுவதை விட அதிக வனப்பகுதி இழக்கப்படுகிறது.
உலகளாவிய காடு இழப்பு 2021 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது என்றாலும், 2030 ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை நிறுத்தச் செய்வதற்கான முக்கியமான பருவநிலை இலக்கு பூர்த்தி செய்யப்படாது.
2021 ஆம் ஆண்டில் காடுகளை அழிப்பதில் உலகின் மிகப்பெரியப் பங்களிப்பாளராக பிரேசில் இருந்தது.
கடந்த இருபது ஆண்டுகளில் உலகளாவிய மரங்களின் பரப்பளவு 130.9 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்துள்ளது.
உலக வனப்பரவல் அதிகரிப்பில் நான்கில் ஒரு பங்கு 13 நாடுகளில் பதிவாகியுள்ளது.
ரஷ்யா (28.4%), கனடா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் குறிப்பிடத் தக்க முன்னேற்றங்கள் பதிவாகின.
2.1 மில்லியன் ஹெக்டேர் (Mha) பரப்பளவில் சீனாவில் மிக அதிக நிகர அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்தியாவிலும் மரங்களின் பரப்பில் 0.87 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்துள்ளது.
2018-20 ஆகிய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டில் 28% காடழிப்பை காபோன் நாடு குறைத்துள்ளது.
2030 ஆம் ஆண்டு இலக்குகளை அடைவதற்கு வனப் பரவல் நிதியை 200 மடங்கு வரை அதிகரிக்க வேண்டும்.