TNPSC Thervupettagam

வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு

March 2 , 2021 1272 days 1180 0
  • தமிழக அரசானது பிப்ரவரி 26 அன்று  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (V) பிரிவின் கீழ் உள்ள சமூகத்திற்கு தற்காலிகமாக 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் ஒரு மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
  • இது பிப்ரவரி 26 அன்று ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றது.
  • இது சுருக்கமாக 2021 ஆம் ஆண்டின் சிறப்பு இட ஒதுக்கீட்டுச் சட்டம் என்று அழைக்கப் படுகிறது.
  • மேலும் இது இரண்டு பிரிவாக உள்ளது - ஒன்று 25 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் 68 சீர் மரபினர் (Denotified Communities) ஆகியோரையும், மற்றொன்று மீதமுள்ள 22 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களையும் உள்ளடக்கியதாகும்.
  • இதில் வன்னிய குல சத்திரியர் சமூகத்தில் வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னி குல சத்திரியர் ஆகியோர் அடங்குவர்.
  • இந்த மசோதா சீர் மரபினர் சமூகங்களுக்கும் மற்றும் அதைப் போன்றுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும் 7% உள் ஒதுக்கீட்டையும் வழங்குகிறது.
  • மேற்கண்ட பிரிவில் சேர்க்கப்படாத பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு 2.5% ஒதுக்கீடு வழங்கப் பட இருக்கிறது.
  • இது ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே.
  • இதில் நீதிபதி ஏ.குலசேகரன் ஆணையம் அதன் பரிந்துரைகளை வழங்கிய பின்னர் மாற்றங்கள் செய்யப்படும்.
  • இது தமிழ்நாட்டின் சாதிகள், சமூகங்கள் மற்றும் பழங்குடியினர் பற்றிய அளவிடக் கூடிய தரவுகளைச் சேகரிக்க அமைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்